close
Choose your channels

பிரசாந்தின் 'அந்தகன்' படத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்: வேற லெவலில் புரமோஷன் செய்ய திட்டம்!

Wednesday, March 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிரசாந்த் நடித்து முடித்துள்ள ‘அந்தகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கைப்பற்றிய நிலையில் இந்த படத்திற்கு வேற லெவல் புரமோஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகிய ‘அந்தகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ’பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அந்தகன்’ படத்தை உலகெங்கும் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்’என்று தெரிவித்துள்ளார். பொதுவாக கலைப்புலி எஸ் தாணு படம் என்றாலே வேற லெவல் புரமோஷன் இருக்கும் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிரசாந்த், கார்த்திக், சிம்ரன், ,சமுத்திரகனி, யோகிபாபு, வனிதா விஜயகுமார், மனோபாலா, கேஎஸ் ரவிக்குமார், ஊர்வசி, லீலா சாம்சன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.