தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வா??? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!!

  • IndiaGlitz, [Saturday,December 12 2020]

 

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை முதல் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் கல்லூரிக்கு வரலாம் என்ற அறிவிப்பு வெளியானது.

ஆனால் அதைத் தொடர்ந்து தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தின் அனைத்து வகுப்பு பாடங்களும் வரும் ஜனவரி வரை ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பை அண்ணாப் பல்கலைக் கழக நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

மேலும் “தனியார் பள்ளிகள் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்தலாம். அதற்கு ஆட்சேபம் இல்லை. அரசு பள்ளிகளின் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்தி வைத்து உள்ளது. அரசு சரியாக செயல்படுவதால் பள்ளிக் கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. 50% பாடங்கள் குறைப்பு மட்டுமின்றி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும்தான் கேள்விகள் கேட்கப்படும்” என செங்கோட்டையன் குறிப்பிட்டு உள்ளார்.

More News

பிறந்த நாளன்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்…

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் தன்னுடைய பிறந்த நாளன்று டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

கமல், ரஜினியை அடுத்து சட்டமன்ற தேர்தலில் குதிக்கும் பிரபல ஹீரோ: தனிக்கட்சியா?

தமிழகத்தில் அரசியல் ஆளுமைகளாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் அடுத்தடுத்து காலமானதை அடுத்து ஆளுமைக்கான வெற்றிடம் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

பீட்டர்பால் விவகாரம்: வனிதாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் வனிதா மீதும் கணவர் மீதும் பீட்டரின் முதல் மனைவி வழக்கு தொடர்ந்தார் 

ரத்தன் டாடா பயோபிக்கில் நடிக்கின்றாரா மாதவன்? அவரே அளித்த விளக்கம்!

இந்திய திரையுலகில் அவ்வப்போது பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வரும் என்பதும், கிட்டத்தட்ட அனைத்து பயோபிக் திரைப்படங்களும் வெற்றி பெற்றுவருகிறது

நான் எதிர்பார்க்கவே இல்லை நிஷா: கமல் கேள்வியால் அதிர்ச்சி அடைந்த நிஷா

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இரண்டு பேர் எவிக்சன் செய்யப்பட உள்ள நிலையில் அதில் ஒருவர் ஜித்தன் ரமேஷ் என்று வெளிவந்த செய்தியையும் பார்த்தோம்