close
Choose your channels

தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனாவால் உயிரிழப்பு

Wednesday, June 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வாரங்களாகவே சென்னையில் கொரொனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருவதும் தினமும் அதிக நபர்கள் பலியாகி வருவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு விஐபிக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரொனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார். மேலும் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி அவர்களும் கொரொனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதுமட்டுமின்றி திமுக பிரமுகரான விபி கலைராஜன் என்பவருக்கும் கொரொனா பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் என்பவர் சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தாமோதரன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனாவுக்கு முதல்வர் அலுவலக செயலாளரே உயிரிழந்த இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சேலத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டவிழாவின்போது புகைப்படங்கள் எடுத்த புகைப்பட கலைஞர் ஒருவர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.