'தலைவி' படத்தில் சசிகலா கேரக்டரில் தேசிய விருது பெற்ற நடிகை?

  • IndiaGlitz, [Wednesday,December 04 2019]

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஒரே நேரத்தில் 3 இயக்குனர்கள் இயக்கி வருவது தெரிந்ததே. அந்த வகையில் இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கி வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு ’தலைவி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத்தும், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமியும் நடித்து வருவது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு என்றால் அதில் சசிகலா கேரக்டர் இல்லாமல் இருக்க வாய்ப்பு இல்லை. எனவே ‘தலைவி’ படத்தில் சசிகலா கேரக்டரில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்த நிலையில், தற்போது சசிகலா கேரக்டரில் நடிகை பிரியாமணி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

’பருத்தி வீரன்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் இந்த படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகிறார். சமீபத்தில் வெளிவந்த ’தலைவி’ படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் பொருந்தாமல் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறிவரும் நிலையில் சசிகலா கேரக்டருக்கு பிரியாமணி பொருத்தமாக இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

More News

ரஞ்சித் ஆக மாறும் அருண்விஜய்

நடிகர் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் 'அக்னி சிறகுகள்' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறார் கமலா ஹாரிஸ்..!

அமெரிக்க அதிபர் பதவி தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளி செனட் சபை உறுப்பினரான கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்

தோழியின் கணவருடன் கள்ளக்காதல்: சென்னையில் நடந்த விபரீதம்!

சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தோழியின் கணவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் பெரும் விபரீதம் ஏற்பட்டுள்ளது

குழந்தைகள் சாப்பிடும் உணவில் இறந்து கிடந்த எலி..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாஃபர்நகர் அரசு பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திருமணமான 20 நாளில் பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் கொலை:: கணவரே கொலை செய்தாரா?

பெற்றோரை எதிர்த்து காதலித்த இளைஞனை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் திருமணமான இருபதாவது நாளில் கொலை செய்யப்பட்டு கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது