சிபிஐ கேரக்டரில் தேசிய விருது பெற்ற நடிகை

  • IndiaGlitz, [Thursday,July 02 2015]

கார்த்தி அறிமுகமாகிய 'பருத்தி வீரன்' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி, அதன்பின்னர் நடித்த பெரும்பாலானபடங்கள் கவர்ச்சியான வேடங்களாகவே இருந்தது. இந்நிலையில் அவர் முதன்முதலாக ஒரு துணிச்சலான சிபிஐ கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தை பிரபல இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்த ஆர்.பி.பட்நாயக் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஜெயம் ரவி அறிமுகமான 'ஜெயம்' உள்பட ஒருசில தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கவர்ச்சி மற்றும் ரொமான்ஸ் கேரக்டர்களில் ப்ரியாமணியை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தின் மூலம் மீண்டும் விஜயசாந்தி போல ஒரு போல்டான கேரக்டரில் பார்ப்பார்கள். இந்த படத்திற்காக சிபிஐ அதிகாரி போன்ற மேனரிசத்திற்கு பயிற்சி எடுக்கும்படி ப்ரியாமணியிடம் கூறியுள்ளேன். அவரும் இந்த படத்திற்காக நிறைய ஹோம் ஒர்க் செய்து வருகிறார்' என்று ஆர்.பி.பட்நாயக் கூறியுள்ளார். இந்த படத்தை இவரே தயாரித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஹாலிவுட்டில் அஜீத்? ஷாலினியின் கவலை

அஜீத் தற்போது நடித்து கொண்டிருக்கும் 'தல 56' படத்திற்காக ஹாலிவுட் ஸ்டைலில் வித்தியாசமான தோற்றத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றாராம்........

விஜய்யிடம் பாராட்டு பெற்ற எதிர்நீச்சல் நடிகை

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் செப்.17ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.......

சிம்புவின் இது நம்ம ஆளு' ரிலீஸ் தேதி?

சுமார் மூன்று வருட காலம் சிம்பு நடித்த திரைப்படம் எதுவும் ரிலீஸாக நிலையில், சிம்பு, ஹன்சிகா நடித்த 'வாலு' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக...

'வேலையில்லா பட்டதாரி'களுக்கு சமந்தா கொடுத்த ரூ.5000/-

ஒரு படம் வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி முடித்த பின்னர் கடைசி நாள் படப்பிடிப்பில் ஒவ்வொரு ஹீரோவும் ஒவ்வொரு விதத்தில் அந்த படத்தில் பணிபுரிந்த டெக்னீஷியன்கள் உள்பட அனைவருக்கும் ஏதாவது பரிசுப்பொருட்களை கொடுப்பது வழக்கம்....

விஷால்-பாண்டிராஜ் படத்தில் 'மெட்ராஸ்' நாயகி

சுசீந்திரன் இயக்கத்தில் 'பாயும் புலி' படத்தில் நடித்து வரும் விஷால், அந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தற்போது உள்ளார்...