close
Choose your channels

குழந்தை பெறாமல் தாயான பிரியங்கா சோப்ரா: ரசிகர்கள் வாழ்த்து

Saturday, January 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா குழந்தை பெறாமலே தாயாக மாறியதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

கடந்த 2000 ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடித்த ’தமிழன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது அவர் தாயாகி உள்ளதாக மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நாங்கள் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்கிறோம். இதனை நாங்கள் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சிறப்புமிக்க நேரத்தில் எங்கள் குடும்பம் குறித்து கவனம் செலுத்துவதால் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா-நிக்ஜோன்ஸ் தம்பதியினருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.