சினிமாவை விட்டே வெளியேற நினைத்தேன்… விஜய் பட நடிகை கூறிய ஷாக்கான தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,May 17 2023]

தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படம் மூலம் சினிமா துறையில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டை கடந்து ஹாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டி வரும் நடிகை ஒருவர் தனது சினிமா வாழ்க்கை குறித்து கூறியிருக்கும் கருத்து பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உலக அழகி பட்டம் வென்று பின்னர் தமிழ் சினிமா மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் பாலிவுட்டில் முன்னணி இடத்தைப் பிடித்த நிலையில் தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் வரவேற்பு பெற்று வருகிறார். அவருடைய ‘லவ் அகேய்ன்‘ திரைப்படம் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது. முன்னதாக இவருடைய ஸ்பை த்ரில்லர் வெப் சீரிஸான ‘சிட்டாடல்‘ வெளியாகி உலக அளவில் வரவேற்பு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது ஹாலிவுட் சினிமா வாழ்க்கை குறித்து பல சுவாரசியமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதில் எனது வேலை நிலையானதல்ல. நாளைக்கே நான் ரத்துச் செய்யப்படலாம். மக்கள் என்னை நிராகரிக்கவும் செய்யலாம். நான் ஹாலிவுட் சினிமாவிற்கு வந்தபோது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருந்தேன். அதனால் பலமுறை சோர்வடைந்துவிட்டேன். சில நேரங்களில் சினிமாவை விட்டே வெளியேற நினைத்தேன். பாலிவுட்டிலும் நிராகரிப்பு இருக்கத்தான் செய்தது. ஆனால் ஓரளவு வேலை செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது என்று தனது ஹாலிவுட் அனுபவம் குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா கருத்துத் தெரிவித்துள்ளார்.

தற்போது ‘சிட்டாடல்’, ‘லவ் அகேய்ன்’ என்று அடுக்கடுக்கான வெற்றியைக் கொண்டாடிவரும் நடிகை பிரியங்கா சோப்ரா தொடர்ந்து ‘ஹெட் ஆஃப் ஸ்டேட்’ திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். அதேபோல பாலிவுட்டில் Jee le zaraa என்ற திரைப்படத்தில் அவர் நடிகை கத்ரினா கைஃப் மற்றும் ஆலியா பட்டுடன் இணைந்து நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

திருமண செயலியில் வரன் பார்த்து சிக்கிய நடிகை… சரமாரியாக அடுக்கப்படும் குற்றச்சாட்டு!

தான் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த ஐடி ஊழியர் ஒருவர், புகாரை வாபஸ்

மக்களால் தேர்வான நடிகைக்கு பெயர் சூட்டிய பாரதிராஜா.. ராதிகா, ரேவதி வரிசையில் இன்னொரு 'ஆர்' நடிகை..!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகும் முதல் திரைப்படமான 'மார்கழி திங்கள்' என்ற படத்தின் நாயகியை மக்களே தேர்வு செய்ய ஒரு வாய்ப்பளிக்கப்பட்டது என்பதை

மொட்டை மாடியில் வேற லெவலில் சிலம்பம் சுற்றும் மாளவிகா மோகனன்.. கிளாமர் வீடியோ..!

நடிகை மாளவிகா மோகனன் மொட்டை மாடியில் வேற லெவலில் சிலம்பம் சுற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

சென்னையில் பிரமாண்டமாக நடைபெறும் 'ஜெயிலர்' இசை வெளியீடு.. யார் யாரெல்லாம் வர்றாங்க..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

'லால் சலாம்' படப்பிடிப்பு முடியும் முன்பே சென்னை திரும்பிய ரஜினி.. என்ன காரணம்?

'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மும்பை சென்று இருந்த நிலையில் அந்த படப்பிடிப்பு முடியும் முன்பே திடீரென அவர் சென்னை திரும்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.