close
Choose your channels

சினிமாவை விட்டே வெளியேற நினைத்தேன்… விஜய் பட நடிகை கூறிய ஷாக்கான தகவல்!

Wednesday, May 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படம் மூலம் சினிமா துறையில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டை கடந்து ஹாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டி வரும் நடிகை ஒருவர் தனது சினிமா வாழ்க்கை குறித்து கூறியிருக்கும் கருத்து பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உலக அழகி பட்டம் வென்று பின்னர் தமிழ் சினிமா மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் பாலிவுட்டில் முன்னணி இடத்தைப் பிடித்த நிலையில் தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் வரவேற்பு பெற்று வருகிறார். அவருடைய ‘லவ் அகேய்ன்‘ திரைப்படம் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது. முன்னதாக இவருடைய ஸ்பை த்ரில்லர் வெப் சீரிஸான ‘சிட்டாடல்‘ வெளியாகி உலக அளவில் வரவேற்பு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது ஹாலிவுட் சினிமா வாழ்க்கை குறித்து பல சுவாரசியமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதில் எனது வேலை நிலையானதல்ல. நாளைக்கே நான் ரத்துச் செய்யப்படலாம். மக்கள் என்னை நிராகரிக்கவும் செய்யலாம். நான் ஹாலிவுட் சினிமாவிற்கு வந்தபோது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருந்தேன். அதனால் பலமுறை சோர்வடைந்துவிட்டேன். சில நேரங்களில் சினிமாவை விட்டே வெளியேற நினைத்தேன். பாலிவுட்டிலும் நிராகரிப்பு இருக்கத்தான் செய்தது. ஆனால் ஓரளவு வேலை செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது என்று தனது ஹாலிவுட் அனுபவம் குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா கருத்துத் தெரிவித்துள்ளார்.

தற்போது ‘சிட்டாடல்’, ‘லவ் அகேய்ன்’ என்று அடுக்கடுக்கான வெற்றியைக் கொண்டாடிவரும் நடிகை பிரியங்கா சோப்ரா தொடர்ந்து ‘ஹெட் ஆஃப் ஸ்டேட்’ திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். அதேபோல பாலிவுட்டில் Jee le zaraa என்ற திரைப்படத்தில் அவர் நடிகை கத்ரினா கைஃப் மற்றும் ஆலியா பட்டுடன் இணைந்து நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.