பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா நடிப்பது உண்மையா? தயாரிப்பாளர் விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,June 04 2020]

பிரபுதேவா இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்
விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடிக்கும் ’கருப்புராஜா வெள்ளைராஜா’ என்ற திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கவிருப்பதாகவும், இந்த படத்தை பிரபுதேவா இயக்க இருந்ததாகவும் கடந்த 2017 ஆம் ஆண்டு செய்திகள் வெளியானது. இந்த படத்தில் கிடைக்கும் லாபத்தை நடிகர் சங்க கட்டட நிதிக்கு தருவதாகவும் தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டிருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட ஆரம்பகட்ட பணிகள் நடந்தபோது திடீரென இந்த படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டது. மேலும் இந்த படம் டிராப் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த திரைப்படம் உருவாக இருப்பதாகவும் விஷாலுக்கு பதிலாக வேறு ஒரு பிரபல ஹீரோ நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் விளக்கம் அளித்துள்ளார்

‘கருப்புராஜா வெள்ளை’ ராஜா படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாகவும், மீண்டும் அந்த படத்தை தயாரிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் எனவே இந்த படம் மீண்டும் தயாரிக்க இருப்பதாகவும் இதில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்திகளில் உண்மை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் மீண்டும் நயன்தாரா நடிக்க இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி வதந்தி என்பது உறுதியாகியுள்ளது

More News

திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி: சென்னை மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்திலும் சென்னையிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் 1000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு மின்வாரியத்தின் விளக்கம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் கணக்கெடுப்பு குறித்து நடிகர் பிரச்சன்னா பதிவு செய்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. அவர் ''இந்தக் கோவிட் லாக்டவுனுக்கு

கவுண்டமணியை தற்செயலாக சந்தித்து புகைப்படம் எடுத்த கிரிக்கெட் வீரர்

காமெடி அரசர் கவுண்டமணி நடிக்காத படமே ஒரு காலத்தில் இல்லை என்ற நிலையில் ஒரு காலத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வந்தார் கவுண்டமணி.

ஜார்ஜ் ஃப்ளாயிட்டுக்கு என்ன நடந்தது??? பரபரப்பு ஏற்படுத்திய வீடியோவை வெளியிட்ட சிறுமி யார்!!! விரிவான தொகுப்பு!!!

கடந்த மே 25 ஆம் தேதி அமெரிக்காவின் மிணசோட்டா மாகாணம் மினியா காவல் நிலைய பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது உலக மக்களிடையே இனவெறி குறித்த கருத்துகளை விவாதிக்க வைத்திருக்கிறது.

சென்னையில் புதிய உச்சத்தில் கொரோனா: ஒரே நாளில் 1000க்கும் மேல்!

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்