close
Choose your channels

நடிகர் விமல் மீது மோசடி புகார்: தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைதில் திடீர் திருப்பம்

Thursday, May 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விமல் நடித்த ‘மன்னார் வகையறா பட பண மோசடி விவகாரத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

விமல் நடித்த ‘மன்னார் வகையறா பட விவகாரத்தில் தயாரிப்பாளர் கோபி என்பவரின் புகாரைத் தொடர்ந்து , சிங்காரவேலன், கணேசன் என்பவரின் மகள் ஆகியோர்களும் விமல் மீது அடுத்தடுத்து புகார் செய்தனர். இந்த புகார்கள் அனைத்தும் போலி என்றும், பணம் பறிக்கும் வகையில் உள்ளதாக குற்றம் சாட்டி நடிகர் விமல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தார்.

இந்த விவகாரத்தில் கடந்த 26ஆம் தேதி சிங்காரவேலன் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் ஜாமீன் கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சிங்காரவேலனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என நடிகர் விமல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் உறுதி அளித்த நிலையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புகார்களை திரும்பப் பெறுதல் போலி ஆவணங்களை ஒப்படைப்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.