அண்ணா நீ இறக்கவில்லை: நா முத்துகுமார் பிறந்த நாளில் பிரபல தயாரிப்பாளர் டுவிட்!

அண்ணா நீ இறக்கவில்லை, இப்பொழுதும் நீ உன் எழுத்துக்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் பிறந்தநாளில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் டுவிட் செய்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்த நா முத்துக்குமார் திடீரென கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலகினர்களூக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று பாடலாசிரியர் நா முத்துகுமார் அவர்களின் பிறந்தநாளை அடுத்து பல்வேறு திரையுலக பிரமுகர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சிம்பு நடித்து முடித்துள்ள ’மாநாடு’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

அண்ணா நீ இறக்கவில்லை உனது தமிழ் எழுத்துக்களால் தமிழர் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். நீ பிறந்த இந்நாள் எம் மக்களால் மறக்கப்படாமல் நினைத்து நினைத்துப் பார்க்கப்படும் நாளாக எப்போதும் இருக்கும்.. எப்போதும் உன் நினைவுகளுடன்’ என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

More News

விண்வெளிக்கு செல்லும் கனவு சுற்றுலா? சாதனை குழுவில் இந்திய பெண்மணி!

மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா போல அனுப்பும் திட்டத்தை உலகின் பல தனியார் நிறுவனங்கள் செயல்படுத்த கனவு கண்டு வருகின்றன.

ரஜினி மக்கள் மன்றம்: ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு ரசிகர் மன்றமாக தொடரும்

விஜய் பாணியில் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது தெரிந்ததே

வேற லெவலுக்கு செல்கிறது சூர்யாவின் 'சூரரை போற்று': அதிகாரபூர்வ அறிவிப்பு

சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவான 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் ஓடிடியில் ரிலீஸ்

அரசியலுக்கு வருகின்றேனா? மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு முன் ரஜினி பேட்டி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களும்