close
Choose your channels

விஜய் பாணியில் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

Monday, July 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது தெரிந்ததே. இந்த நிலையில் விஜய் பாணியில் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தையும் தெலுங்கு இயக்குனர் ஒருவரே இயக்க இருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் வெளியான திரைப்படம் ’ஜாதி ரட்னலு’. ரூ.5 கோடி பட்ஜெட்டில் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் 65 கோடிக்கு மேல் வசூல் ஆகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அனுதீப் என்பவர் இயக்கி இருந்த நிலையில் இவர்தான் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் படங்கள் தெலுங்கில் நல்ல வசூலை குவித்து வரும் நிலையில் தற்போது நேரடி தெலுங்கு திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’ரஜினி முருகன்’ படத்தில் பார்த்த சிவகார்த்திகேயனை பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.