ரஜினி உருவப்பொம்மை எரிப்பு: சென்னையில் பதட்டம்

  • IndiaGlitz, [Saturday,May 20 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை இன்னும் அவர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதற்குள் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்றும், வந்தால் வரட்டும் என்றும், வந்தால் தான் அரசியலில் உள்ள கஷ்டம் அவருக்கு புரியும் என்றும் பல தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ரசிகர்களிடம் உரையாடிய ரஜினிகாந்த், 'சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றி ஒருசிலர் கடுமையாக விமர்சனம் செய்வதாகவும், கீழ்த்தரமான இந்த விமர்சனங்களால் தனக்கு வருத்தம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

ரஜினியின் இந்த பேச்சுக்கு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழர்களை அவர் கீழ்த்தரமானவர்கள் என்று எப்படி சொல்லலாம் என்று அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை அம்பத்தூரில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ரஜினிக்கு எதிராக கோஷமிட்ட போராட்டக்காரர்கள், ஒரு கட்டத்தில் ரஜினியின் உருவ பொம்மையை எரித்தனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் உருவபொம்மை எரித்தவர்களை எச்சரித்து அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர்.

ஆனாலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், 'ரஜினிகாந்த் உடனடியாக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ரஜினி வீட்டின் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பதட்டம் நிலவியது.

More News

தீபா புருசனெல்லாம் அரசியலுக்கு வரலாம்! ரஜினி வரக்கூடாதா? பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இன்றைய அரசியல் பேச்சு குறித்து பல அரசியல்வாதிகள் கருத்து தெரிவிப்பதை பார்த்தால் அவர் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று பயப்படுவதாகவே புரிந்து கொள்ள முடிகிறது என்று பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்

பிரதமர் மோடிக்கு கதை சொன்ன சச்சின் தெண்டுல்கர்

கிரிக்கெட் உலக சூப்பர் ஸ்டார் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வரும் 26ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

ஸ்டாலினை பாராட்டிய ரஜினி மோடியை ஏன் பாராட்டவில்லை. தமிழிசை கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பேசிய அரசியல் குறித்த பேச்சு தமிழக அரசியலில் ஒரு புயலை கிளப்பிவிட்டது...

ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து ஓபிஎஸ் கூறியது என்ன?

நீண்ட வருடங்களுக்கு பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கடந்த 15ஆம் தேதியில் இருந்து சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்த செய்தியை விட அவர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அரசியல் குறித்த கருத்து கடந்த ஐந்து நாட்களாக டிரெண்டில் உள்ளது. ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து கிட்டத்தட்ட அனைத்து தமிழக அரசியல்வாதிகளும் கரு

நான் ஒரு பச்சைத்தமிழன் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதன் முழுவிபரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 15ஆம் தேதி முதல் சென்னையில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இன்றுடன் முதல்கட்ட ரசிகர்களுடனான சந்திப்பு முடிவடைந்தது. ரசிகர்கள் சந்திப்பின் முதல் நாள் ரஜினி பேசிய சில அரசியல் கருத்துக்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பலவதந்திகள் பரவிய நிலையில் இன்றைய கடைசி தினத்தில் அது