close
Choose your channels

லாட்ஜில் தங்கிய காதலர்களை மிரட்டிய போலீஸ் பணி  நீக்கம் 

Tuesday, March 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புதுச்சேரியில் லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த காதலர்களை மிரட்டி பணம் பறித்த போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூரை சேர்ந்த காதல் ஜோடி ஒன்று புதுச்சேரிக்கு சுற்றுலாவாக சென்ற நிலையில் அவர்கள் அங்கு உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்த நிலையில் இரவில் ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சதீஷ்குமார் மற்றும் சுரேஷ் ஆகியோர் அந்த லாட்ஜில் காதல் ஜோடிகள் தனியாக தங்கி இருப்பதை அறிந்து அவர்களிடம் விசாரணை செய்ததாகவும் அதன் பின்னர் அவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு சென்றதாகவும் தெரிகிறது.

இது தொடர்பாக காவலர்கள் மீது காதல் ஜோடிகள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் அடிப்படையில் காதலர்களை மிரட்டி பணம் பறித்த 2 காவலர்கள் முதலில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அதன் பின்னர் தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களே காதல் ஜோடியிடம் பணம் பறித்த சம்பவம் புதுவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.