close
Choose your channels

வடிவேலு ஸ்டைலில் ஒட்டகப்பால் டீ… கடையையே தரை மட்டமாக்கிய சம்பவம்!

Thursday, November 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வடிவேலு ஸ்டைலில் ஒட்டகப்பால் டீ… கடையையே தரை மட்டமாக்கிய சம்பவம்!


 

புதுச்சேரி மாநிலத்தில் மதுபோதையில் இருந்த 3 இளைஞர்கள் பேக்கரிக்குச் சென்று ஒட்டகப்பால் டீ கேட்ட சம்பவம் கடும் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு விட்டுவிடாமல் ஒட்டகப்பாலில் டீ கிடைக்காது என்பதை அறிந்த அந்த இளைஞர்கள் ஒட்டுமொத்த கடையையும் அடித்து நொறுக்கி, அங்கிருந்த ஊழியர்களையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

வடிவேலு வெற்றிக்கொடி கட்டு எனும் படத்தில் துபாயில் வேலை செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்திருப்பார். ஊருக்கு வந்ததில் அவர் கொடுக்கும் பில்டப்புக்கு அளவே இருக்காது. ஒரு குக்கிராமத்தில் இருந்து கொண்டு அவர் கொடுக்கும் ஒரு ரகளை, என்ன டீ இது? ஒட்டகப்பாலில் எல்லாம் டீ போட மாட்டீயா? என டீக்கடையில் இருந்து கொண்டு கேட்பார். அதுபோன்ற ஒரு காமெடிதான் புதுச்சேரியில் நடைபெற்று இருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் பேக்கரி வைத்திருப்பவர் நாராயணன். நேற்று இவருடைய பேக்கரிக்கு 3 இளைஞர்கள் வந்து இருக்கின்றனர். அந்த பேக்கரியில் டீ எல்லாம் கிடைக்காது எனத் தெரியாத அந்த இளைஞர்கள் ஊழியர்களிடம் டீ கேட்டதோடு அதுவும் ஒட்டகப்பால் டீ கேட்டு ரகளை செய்திருக்கின்றனர். அதற்கு ஊழியர்கள் இங்கு டீ எல்லாம் விற்க மாட்டோம் கிளம்புங்க.. எனச்சொல்லி இருக்கின்றனர்.

இதைக் கேட்ட இளைஞர்கள் போதையில் ரகளை செய்து ஒட்டுமொத்த கடையையும் அடித்து நொறுக்கி இருக்கின்றனர். இச்சம்பவத்தை அடுத்து நாராயணன் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய 3 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.