close
Choose your channels

பிரபல பாடகர் சுட்டுக்கொலை: காதல் விவகாரமா?

Tuesday, May 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பஞ்சாப் பாடகர் நவ்ஜோத் சிங் சுட்டு கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

22 வயது பஞ்சாப் பாடகர் நவ்ஜோத்சிங் கடந்த ஞாயிறு அன்று வெளியூர் சென்றுவிட்டு தனது வீட்டுக்க்கு திரும்பி கொண்டிருந்தார். கொலை செய்யப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தனது தாயாரிடம் அவர் பேசி வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக சிங் கூறியுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்

போலீசாரின் தீவிர தேடுதலுக்கு பின்னர் நவ்ஜோத் சிங் ஒரு பேக்டரி அருகே ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டிருப்பதையும், அருகே அவரது கார் நின்று கொண்டிருப்பதையும் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து எந்த பொருளும் திருடு போகாததால் இந்த கொலை திருட்டுக்காக நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நவ்ஜோத் சிங் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுவதால் இந்த கொலைக்கு காதல் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.