லிவ்-இன் உறவில் இருந்த இளம் நடிகை தற்கொலை.. தலைமறைவாக இருந்த 'புஷ்பா' நடிகர் கைது..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
இளம் நடிகை தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அதற்கு காரணமானவர் என சந்தேகப்படும் ’புஷ்பா’ படத்தில் நடித்த நடிகர் ஒருவாரமாக தலைமறைவாக இருந்ததாகவும், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
’புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுனுக்கு நண்பராக கேசவா என்ற கேரக்டரில் நடித்தவர் ஜெகதீஷ் பிரதாப். மேலும் இவர் ‘புஷ்பா 2’ படத்திலும் நடித்து வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் இளம் நடிகை ஒருவருடன் ஜெகதீஷ் லிவ்-இன் உறவில் இருந்ததாகவும், ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் ஜெகதீஷ் கொடுத்த தொல்லையால் இளம் நடிகை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இளம் நடிகையின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஜெகதீஷ் ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று காவல்துறை அவரை கைது செய்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இளம் நடிகையுடன் ஜெகதீஷ் லிவ்-இன் உறவில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரிடம் மேலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://1571723588.rsc.cdn77.org/anomusercomment.jpg)