ராயபுரம் ஹோமில் 42 குழந்தைகளுக்கு கொரோனா: ராகவா லாரன்ஸ் உதவி

இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என கோடிக்கணக்கில் தனது சொந்த பணத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்து உதவி செய்து வருகிறார் என்பது தெரிந்தே.

இந்த நிலையில் அவர் நடத்தி வந்த குழந்தைகள் காப்பகத்தில் திடீரென ஒரு சில குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் தீவிர சிகிச்சை காரணமாக குணமடைந்து மீண்டும் காப்பகத்திற்கு திரும்பினர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ராயபுரம் பகுதியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் 42 குழந்தைகளுக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை கேட்டதிலிருந்து தான் மிகவும் வருத்தத்துடன் இருப்பதாகவும் அந்த காப்பகங்களில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் தனது குழந்தை போல் எண்ணி அவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு தேவை என்றும் தன்னால் முடிந்த உதவியை மாவட்ட குழந்தைகள் காப்பக அதிகாரி சூரியகலா மேடம் அவர்கள் மூலம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதே போல் மற்றவர்களும் அந்த குழந்தைகளுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாக ராகவா லாரன்ஸ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

More News

தமிழகத்தில் வீரியம் ஆகியுள்ள கொரோனா வைரஸ்: அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை தினந்தோறும் மூன்று இலக்கத்தில் இருந்த கொரோனாவின் பாதிப்பு தற்போது கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

இரண்டாம் பாதியாவது சந்தோஷமா இருக்குமா? கவினின் புலம்பல் பதிவு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் பெரும் புகழ்பெற்ற நடிகர் கவின், அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பதை பார்த்து வருகிறோம்.

மொட்டை தலைக்கு முத்தம் கொடுத்த அமலாபால்: நிலவின் ஒளியில் காதல்!

நடிகை அமலாபால் இந்த கொரோனா விடுமுறையில் தனது சமூக வலைப்பக்கத்தில் அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே.

சென்னையில் 1407 பேருக்கு கொரோனா பாதிப்பு: இன்று தமிழகத்தில் எவ்வளவு?

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு ஒவ்வொரு நாளும் ஜெட் வேகத்தில் எகிறி கொண்டிருக்கும் நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

திடீரென பிங்க் நிறத்தில் மாறிய ஏரி: காரணம் தெரியாமல் குழம்பிய விஞ்ஞானிகள்!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க லோனார் ஏரி பச்சை நிறத்தில் இருந்து பிங்க் நிறமாக மாறியிருக்கிறது. இதைப் பார்த்த பொது மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.