ஓடிடியில் ராகவா லாரன்ஸின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,June 29 2020]

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரனோ வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சில படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாகின்றன. தமிழில் ’பொன்மகள்வந்தாள்’ ’பெண்குயின்’ ஆகிய திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் பாலிவுட் உட்பட பல மொழிகளிலும் பல முன்னணி நடிகர் நடிகைகளின் திரைப்படங்கள் ஒடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆயின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகி வந்த ’லட்சுமி பாம்’ என்ற திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் ‘லட்சுமி பாம்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நீங்கள் வீட்டில் இருந்து சந்தோசமாக கண்டு களியுங்கள் என்று கூறி இந்த திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அக்ஷய்குமார், கைரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தமிழில் வெளியான ’காஞ்சனா’ திரை படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி நடிகர்களின் படங்களே ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் தியேட்டர் அதிபர்கள் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

More News

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு? பரபரப்பு தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு 4000ஐ நெருங்கியுள்ள இன்றும் 4000க்கு மிக அருகே நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு பிடிவாரண்ட்: பரபரப்பு தகவல்

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபருக்கே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சூர்யா அறிக்கையை முதல்வருக்கு டேக் செய்த இயக்குனர்!

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கோலிவுட் திரையுலகில் உள்ள கிட்டத்தட்ட அனைவருமே

துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், பதவிகளில் இருப்பவர்கள் சிலரையும் கொரோனா வைரஸ் தாக்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இனிமே  கொரோனா பரிசோதனையை வீட்டிலேயே செய்து கொள்ளலாம்: வரவிருக்கும் புது கருவி!!!

ஒட்டுமொத்த மனித இனமும் கொரோனாவின் பிடியில் சிக்கிக்கொண்டு விடுபடுவதற்கு வழித்தெரியாமல் இருக்கிறது.