close
Choose your channels

மனைவியை கொலை செய்துவிட்டு மொபிலில் கேம் விளையாடிய கணவன்: அதிர்ச்சியில் போலீசார்!

Tuesday, December 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மனைவியை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்துவிட்டு அவரது பிணம் அருகே உட்கார்ந்து கேம் விளையாடிய கணவனால் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் சிங் என்பவருக்கு சிவ் கன்வர் என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விக்ரம் சிங் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் மனைவி சிவ் கன்வர் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார் இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று கன்வர் சிங் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த நிலையில் மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் விக்ரம் சிங் கோபத்தில் தனது மனைவியை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து விக்ரம் சிங் வீட்டிற்கு வந்தபோது சிவ் கன்வர் ரத்த வெள்ளத்தில் கிட்ந்தார். இறந்து கிடந்த பிணத்தின் அருகே உட்கார்ந்து விக்ரமசிங் மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். சம்பவம் நடந்தபோது இரண்டு குழந்தைகளும் வீட்டில் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.