close
Choose your channels

ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன் வாக்களிப்பு.. விஜய் துபாயில் சிக்கி கொண்டாரா?

Friday, April 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் பல திரை உலக பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்கு சாவடிகளில் வாக்களித்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களித்ததாகவும் அதே கல்லூரியில் நடிகர் கார்த்திக் தனது மகன் கௌதம் கார்த்திக் உடன் வந்து வாக்களித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் அரை மணி நேரத்துக்கு முன்பே வந்து விட்ட அஜித், திருவான்மியூர் வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்தது தனது ஜனநாயக கடமையை ஆற்றிய புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமார் உடன் வாக்களித்ததாகவும், நடிகை குஷ்பு தனது கணவர் சுந்தர் சி மற்றும் மகள்களுடன் வந்து வாக்களித்த புகைப்படங்கள் அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தான் குடும்பத்துடன் ஜனநாயக கடமையாற்றிவிட்டதாக குஷ்பு தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன், தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து வாக்களித்த நிலையில், அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று பேட்டியளித்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் வாக்களிப்பதற்காக நேற்று ரஷ்யாவில் இருந்து கிளம்பிய நிலையில் அவர் துபாயில் சிக்கிக் கொண்டதாகவும் துபாயில் பெய்த கனமழை காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சில மணி நேரம் தாமதமாக வந்து வாக்களிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.