இலங்கை தொடர் வெடிகுண்டு சம்பவம்: பலியானவர்களுக்கு ரஜினி, கமல் இரங்கல்

இலங்கையில் சர்ச் மற்றும் ஓட்டல்களில் நேற்று நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இவர்களில் ஐவர் இந்தியர்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவல் ஆகும்.

இந்த நிலையில் தீவிரவாதிகளின் இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு உலகமே கண்டனம் தெரிவித்து வருவதோடு பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை என தெரிவித்துள்ளார். அதேபோல் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில், ''வன்முறை ஒருபோதும் மனித முரண் பாடுகளுக்கு இறுதி தீர்வு அல்ல. இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நீதி வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சமற்ற மற்றும் விரைவாக வகையில் செயல்படும்படி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

More News

'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்': சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

சூப்பர் ஹீரோக்களின் சாகசங்கள் குறித்த படங்களான அவெஞ்சர்ஸ் வரிசையில் அவெஞ்சர்ஸ், 'ஏஜ் ஆஃப் அல்ட்ரான்',  'சிவில் வார்', 'அவெஞ்சர்ஸ் 'இன்ஃபினிட்டி வார்'

இப்படியெல்லாம் செய்யாதீங்க: ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் அறிவுரை

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'காஞ்சனா 3' திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும்

'சூர்யா 39' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

சூர்யா நடித்து முடித்துள்ள 36வது திரைப்படமான 'என்.ஜி.கே' திரைப்படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

நடிகர் மோகன்லாலில் அடுத்த புதிய அவதாரம்

இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் உள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'லூசிஃபயர்' மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஷங்கரின் 25வது வருடம்: பாராட்டிய பிரபல இயக்குனர்கள்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கடந்த 1993ஆம் ஆண்டு 'ஜெண்டில்மேன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.