கேமிராவுக்கு பின்னால் ரஜினிக்கு நடிக்க தெரியாது. எஸ்பி முத்துராமன்

  • IndiaGlitz, [Monday,May 15 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். சற்று முன்னர் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் நடித்த பல வெற்றி படங்களை இயக்கிய எஸ்பி முத்துராமன் அவர்கள் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் எஸ்பி முத்துராமன் பேசியதாவது:

25 படங்களை ரஜினியை வைத்து நான் இயக்கி இருக்கிறேன்; புகழை தலையில் வைத்துக் கொள்ளாதவர் ரஜினி. ரஜினி பழசை என்றும் மறக்காதவர். கேமராவுக்கு பின்னால் ரஜினி என்றுமே நடித்ததில்லை; அவர் இயக்குனர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்.

ஸ்டைலுடன் ஸ்பீடான நடிப்பை வெளிபடுத்துபவர் ரஜினிகாந்த். அவரது கண்களே அனைத்தையும் பேசிவிடும்; ரஜினியின் காலில் யாரும் விழ வேண்டாம்; சூப்பர் ஸ்டாரைப் போல ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்: ரஜினிகாந்தை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும்: ரஜினி மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்' என்று கூறினார். இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது பேசி வருகிறார். அவர் என்ன பேசினார் என்பதை இன்னும் ஒருசில நிமிடங்களில் பார்ப்போம்.

More News

'பாகுபலி 2' தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளின் சென்னை வசூல் விபரங்கள்

எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான படைப்பில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் நடிப்பில் உருவான 'பாகுபலி 2' திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பு திரைப்படம் ஏற்கனவே சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் நல்ல லாபத்தை விநியோகிஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுகும் கொடுத்தது என்பதை பார்த்தோம்...

விஜய்சேதுபதி-த்ரிஷா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

ஜெயம் ரவியின் 'ரோமியோ ஜூலியட், விஷாலின் 'கத்திச்சண்டை' விக்ரம் பிரபுவின் 'வீரசிவாஜி ஆகிய படங்களை அடுத்து தற்போது விஷால் நடித்து வரும் 'துப்பறிவாளன்' படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரித்து வருகிறார்...

விஷால் விஷ்ணுவை 'கதாநாயகன்' ஆக்கிய தனுஷ்

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளளயதலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷால் விஷ்ணு...

உதயநிதியின் 'சரவணன் இருக்க பயமேன்' சென்னை வசூல் எப்படி?

இயக்குனர் எழில் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் 'சரவணன் இருக்க பயமேன்'. இருவருமே 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மனிதன் என சூப்பர் ஹிட் படங்களை தனித்தனியாக கொடுத்த நிலையில் இருவரும் இணைந்த இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது...

மூன்றாவது வாரத்திலும் வசூலில் சாதனை புரிந்த மகிழ்மதி மன்னன்

உலகம் முழுவதும் ரசிகர்கள் மனதில் இடம்பெற்றது மட்டுமின்றி, வசூலிலும் சாதனை புரிந்த எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான படைப்பான 'பாகுபலி 2' திரைப்படம் மூன்று வாரங்கள் ஆகியும் திருப்திகரமான வசூலை இன்னும் கொடுத்து வருகிறது...