close
Choose your channels

கேமிராவுக்கு பின்னால் ரஜினிக்கு நடிக்க தெரியாது. எஸ்பி முத்துராமன்

Monday, May 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். சற்று முன்னர் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் நடித்த பல வெற்றி படங்களை இயக்கிய எஸ்பி முத்துராமன் அவர்கள் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் எஸ்பி முத்துராமன் பேசியதாவது:

25 படங்களை ரஜினியை வைத்து நான் இயக்கி இருக்கிறேன்; புகழை தலையில் வைத்துக் கொள்ளாதவர் ரஜினி. ரஜினி பழசை என்றும் மறக்காதவர். கேமராவுக்கு பின்னால் ரஜினி என்றுமே நடித்ததில்லை; அவர் இயக்குனர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்.

ஸ்டைலுடன் ஸ்பீடான நடிப்பை வெளிபடுத்துபவர் ரஜினிகாந்த். அவரது கண்களே அனைத்தையும் பேசிவிடும்; ரஜினியின் காலில் யாரும் விழ வேண்டாம்; சூப்பர் ஸ்டாரைப் போல ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்: ரஜினிகாந்தை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும்: ரஜினி மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்' என்று கூறினார். இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது பேசி வருகிறார். அவர் என்ன பேசினார் என்பதை இன்னும் ஒருசில நிமிடங்களில் பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.