44 வயதில் தொழிலதிபருடன் திருமணம்: ரஜினி, கமல் பட நடிகைக்கு ரசிகர்கள் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Tuesday,March 21 2023]

ரஜினி, கமல், சரத்குமார் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை ஒருவர் 44 வயதில் திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் நடித்த ’படையப்பா’ கமல்ஹாசன் நடித்த ’தெனாலி’ சரத்குமார் நடித்த ’சூரிய வம்சம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை லாவண்யா. இவர் திரைப்படங்களில் மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்தார் என்பதும் குறிப்பாக ’அருவி’ என்ற சீரியலில் லட்சுமி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 44 வயதான இவர் பிரசன்னா என்ற தொழில் அதிபரை சமீபத்தில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் ’அருவி’ சீரியல் குழுவினர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இவரது திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

'வலி தெரியாம இருக்க, அதைவிட பெரிய வலியை கொடுக்கணும்: 'ஆகஸ்ட் 16 1947' டிரைலர்..!

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில், பொன் குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிய திரைப்படம் 'ஆகஸ்ட் 16 1947'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

பாக்யராஜ் குடும்பத்திற்கு நன்றிக்கடன்.. ஷாந்தனு படத்தின் தயாரிப்பாளர் துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி..!

துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பில்  சாந்தனு நடிப்பில் உருவான திரைப்படம் 'ராவண கூட்டம்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்தது

அஜித், விஜய், விக்ரம் பட வில்லன் இறந்ததாக வதந்தி.. அவரே அளித்த விளக்கம்..!

அஜித், விஜய், விக்ரம் உள்பட  பல பிரபலங்களின் படங்களில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவர் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில் அவரே இதற்கு வீடியோ ஒன்றின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகளை திருடியது இவரா? அதிரடியாக கைது செய்த போலீசார்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகைகள் உட்பட வைரங்கள் ஆகியவை காணாமல் போன நிலையில் இந்த வழக்கில் ஒருவர்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரையில் நடிகை விருமாண்டி அபிராமி!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரையில் நடிகை விருமாண்டி அபிராமி!!பள்ளிக்குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள்,  துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு