close
Choose your channels

தாமரை மலரும்.. மாற்றம் வேண்டும்.. ரஜினி, விஜய் பட நடிகையின் அம்மா பேட்டி..!

Friday, April 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரளாவில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்பட பல பிரபலங்கள் உடன் நடித்த நடிகையின் அம்மா ’தாமரை மலர வேண்டும் என்றும் கேரளாவில் மாற்றம் வர வேண்டும் என்றும் பேட்டி அளித்துள்ளார்.

இந்தியாவில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று கேரளா உள்பட ஒரு சில மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கேரளாவில் அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் வாக்களித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் அஜித், விஜய், சூர்யா ,தனுஷ் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா நடிகை மேனகா வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய போது ’15 வருடமாக கேரளாவில் ஒரு சில கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சியில் இருப்பதாகவும் கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்றும் தாமரை மலரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக திருச்சூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கேரளாவில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.