ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும்: வழக்கறிஞர் தகவல்

  • IndiaGlitz, [Thursday,December 17 2020]

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை தொடர்பாக ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது திடீரென வன்முறை ஏற்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது

இந்த ஆணையம் சுறுசுறுப்பாக விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் விசாரணை ஆணையம் தனது விசாரணையை துவக்கியுள்ளது

இந்த நிலையில் துப்பாக்கி சூட்டின் போது ஏற்பட்ட வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என்று பேட்டி அளித்த ரஜினிகாந்த் விசாரணை ஆணையம் முன் ஆஜராக வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகாமல் அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை செய்யப்படும் என விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

More News

விவசாயிகளின் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது… காட்டத்துடன் உச்சநீதிமன்றம்!!!

டெல்லியில் 22 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று நேற்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

சாலையில் நடந்து சென்றவர் மீது இடிந்து விழும் கட்டிடம்… பதற வைக்கும் வீடியோ!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் சாலையில் நடந்து சென்றவர் மீது புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மேல்மாடி தூண் இடிந்து விழும் காட்சி வீடியோவாக வெளியாகி இருக்கிறது

சத்யராஜ் மகள் சேரும் அரசியல் கட்சி இதுவா? ரஜினிக்கு சிக்கலா?

ஒவ்வொரு முறை சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் போது திடீரென நடிகர் நடிகைகள் ஒரு சில அரசியல் கட்சிகளில் சேர்ந்து பிரச்சாரம் செய்வார்கள் என்பது தெரிந்ததே

பாலியல் குற்றத்துக்கு ஆண்மை நீக்கத் தண்டனையா??? அசத்தும் புதுச்சட்டம்!!!

பாகிஸ்தான் அரசாங்கம் பாலியல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் சடத்த்திற்கு ஒப்புதல் வழங்கி அதிரடி காட்டி இருக்கிறது.

நானும் குரூப்ல சேர்ந்துகிறேன்; பாலா கலாய்ப்பது யாரை? 

பிக்பாஸ் வீட்டில் ஆரி தனித்திறமையுடன் எந்த குரூப்பிலும் இணையாமல் விளையாடி வருவதால் அவருக்கு வீட்டுக்குள்ளேயே எதிரிகள் அதிகமாகி வருகின்றனர். ஏற்கனவே அர்ச்சனாவும் அவரது ஆதரவாளர்களும்