எனக்கு பெரும் ஏமாற்றம்; மாவட்ட செயலாளர்கள் சந்திப்புக்கு பின் ரஜினி பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் மாவட்ட செயலாளர்களை சந்தித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒரு ஆண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களாக சந்தித்தேன். அவர்கள் நிறைய கேள்விகள் கேட்டார்கள். அதற்கு நான் பதில் அளித்தேன். நாங்கள் நிறைய விஷயங்களை பரிமாறிக் கொண்டோம். மாவட்ட செயலாளர்கள் அனைவருக்கும் ரொம்ப திருப்தி. ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு அவ்வளவாக திருப்தி இல்லை. எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். அது என்ன ஏமாற்றம் என்பது குறித்து நான் இப்போது சொல்ல விரும்பவில்லை. நேரம் வரும்போது சொல்கிறேன் என்று கூறினார்

பின்னர் இஸ்லாமிய அமைப்பினர்களை சந்தித்தது ஒரு இனிமையான அனுபவம் என்றும் அன்பு சகோதரத்துவம் நாட்டில் ஒற்றுமை நிலவுவதற்கு நீங்கள் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள் என்றும், நான் கண்டிப்பாக என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று உறுதி கூறினேன் என்றும் ரஜினிகாந்த் கூறினார்

மேலும் தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக தான் கூறியது உண்மைதான் என்றும் அந்த வெற்றிடத்தை என்னாலும் கமலஹாசனாலும் நிரப்ப முடியுமா என்பதை காலம் தான் பதில் சொல்லும் என்று ரஜினிகாந்த் கூறினார். ரஜினிகாந்தின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

விஜய் நடிக்க வேண்டிய படத்தில் சிம்பு? சுதா கொங்காரா மாஸ்டர் பிளான் 

'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள தளபதி விஜய் அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.

கொரோனா வைரஸ் பீதி: கஸ்தூரி படப்பிடிப்பில் பரபரப்பு 

நடிகை கஸ்தூரி நடித்து வரும் தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தின் அருகில் உள்ள ஐடி நிறுவனம் திடீரென கொரொனா வைரஸ் பீதி காரணமாக மூடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பா ரஞ்சித்-ஆர்யா படத்தில் வில்லனாகும் தமிழ் பட ஹீரோ

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருக்கும் 'சல்பேட்டா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

வெற்றிமாறனின் அடுத்த பட கதை இதுதான்

இயக்குனர் வெற்றிமாறன் நாவல்களை அடிப்படையாக வைத்து திரைப்படம் எடுப்பவர் என்பது அனைவரும் தெரிந்ததே. மு.சந்திரகுமார் எழுதிய லாக்கப்' என்ற நாவலை 'விசாரணை'

சகலகலா வல்லவனாகும் சந்தானம்: ஆச்சரிய தகவல் 

சந்தானம் நடிப்பில் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பிஸ்கோத்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்