'நீங்க தான் ரியல் சூப்பர் ஸ்டார்': காவல்துறை அதிகாரியை பாராட்டிய ரஜினிகாந்த்!

  • IndiaGlitz, [Friday,July 29 2022]

காவல்துறை அதிகாரிகளை வீட்டிற்கு வரவழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ’நீங்கள் தான் ரியல் சூப்பர் ஸ்டார்’ என பாராட்டு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார் என்பதும் அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர், முதல்வர் பங்கு கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்த நிலையில் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் போது அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து நுங்கம்பாக்கம் ஏசி தலைமையில் காவலர் குழு ரஜினியை அவரது வீட்டிலிருந்து நேரு ஸ்டேடியம் வரை ட்ராபிக் இன்றி அழைத்து வந்ததோடு நேரு ஸ்டேடியத்தில் அவரது இருக்கையில் அமர வைக்கும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை கனகச்சிதமாக செய்திருந்தது.

இதனை அடுத்து தனக்கு சரியான வகையில் பாதுகாப்பு அளித்த காவல்துறையினரை இன்று வீட்டிற்கு வரவழைத்து ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரையும் ’நீங்கள் தான் ரியல் சூப்பர் ஸ்டார்’ என்று அவர் பாராட்டினார். பின்னர் ஒவ்வொரு காவல் துறை அதிகாரியுடனும் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதுகுறித்து காவல்துறையினர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’நாங்கள் எங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை தான் செய்தோம், ஆனால் அதை ரஜினிகாந்த் அவர்கள் மதித்து வீட்டுக்கே வரவழைத்து பாராட்டியது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த் சாதாரண காவலர்களின் பணிச்சுமையை மனதில் வைத்து எங்களை பாராட்டியதை பார்க்கும் போது உண்மையிலே அவர் தான் ரியல் சூப்பர் ஸ்டார்’ என்று கூறினார்கள். ரஜினிகாந்தின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

More News

'கோமாளி' பட நாயகிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி!

 ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' படத்தின் நாயகிகளில் ஒருவரான சம்யுக்தா ஹெக்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

தனது வீட்டில் திருடிய திருடனுக்கு நன்றி கூறி வீடியோ பதிவு செய்த பிரபல நடிகை!

பிரபல நடிகை ஒருவர் தான் ஆசை ஆசையாய் வளர்த்த நாய் திருடு போனதை அடுத்து கதறி அழுது இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்ட நிலையில் அந்த வீடியோவை பார்த்த உடன்  திருடன் செய்த செயல் பெரும் நெகிழ்ச்சியை

பிகினி புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி அகர்வால் அடுத்து செய்தது என்ன தெரியுமா? ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சாக்ஷி அகர்வால் பிகினி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் செய்த

விபச்சார வழக்கில் சிக்கி ஜாமினில் வெளிவந்த நடிகை மீண்டும் கைது!

விபச்சார வழக்கில் சிக்கி கைதான பிரபல நடிகை ஒருவர் ஜாமீனில் வெளிவந்த நிலையில் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாக சைதன்யாவுடன் சைலண்ட் டீல் முடித்த சமந்தா? பல கோடி கைமாறியதாக தகவல்!

நடிகை சமந்தா விவாகரத்து செய்த கணவர் நாக சைதன்யாவுடன் சைலன்டாக ஒரு டீல் முடித்து விட்டதாகவும் இந்த டீலுக்கு பல கோடிகள் கைமாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.