close
Choose your channels

நாக சைதன்யாவுடன் சைலண்ட் டீல் முடித்த சமந்தா? பல கோடி கைமாறியதாக தகவல்!

Friday, July 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா விவாகரத்து செய்த கணவர் நாக சைதன்யாவுடன் சைலன்டாக ஒரு டீல் முடித்து விட்டதாகவும் இந்த டீலுக்கு பல கோடிகள் கைமாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் என்பதும் நான்கு ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்த இந்த தம்பதிகள் திடீரென கடந்த ஆண்டு தங்களது பிரிவை அறிவித்தார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் விவாகரத்து பெறுவதற்கு முன்னர் ஐதராபாத்தில் இருவரும் சேர்ந்து வாழ்வதற்காக பங்களா ஒன்றை கட்டி வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இருவரும் பிரிந்து விட்ட நிலையில் அந்த பங்களாவை சமந்தாவே விலைக்கு வாங்கி விட்டதாகவும் இதற்காக ஒருசில கோடிகளை சமந்தா தனது முன்னாள் கணவருக்கு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் பேட்டியளித்த பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் முரளி மோகன் என்பவர் அளித்த பேட்டி ஒன்றில் இந்த தகவலை கூறியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருக்கும் சமந்தா தற்போது சாகுந்தலம், யசோதா, குஷி ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும், இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos