ரஜினிக்கு அவரே எழுதிய பஞ்ச் வசனங்கள்: 'அண்ணாத்த' அப்டேட் 

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிக விரைவில் தொடங்க உள்ளது. முதல் கட்டமாக ரஜினி இல்லாத காட்சிகளின் படப்பிடிப்புகள் நடைபெறும் என்றும் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் ரஜினிகாந்த் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு பொருத்தமாக ஒரு சில பஞ்ச் வசனங்களை ரஜினிகாந்தை எழுதி உள்ளதாகவும் அந்த வசனங்களை அவர் தொலைபேசி மூலம் இயக்குனர் சிறுத்தை சிவாவுக்கு பேசி காட்டியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வசனங்களை கேட்ட சிறுத்தை சிவா, பஞ்ச் வசனங்கள் மிக அருமையாக இருப்பதாகவும், ரசிகர்கள் இந்த வசனங்களை கண்டிப்பாக ரசிப்பார்கள் என்று அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ’பாபா’ உள்பட ஒரு சில திரைப்படங்களுக்கு ரஜினிகாந்த் பஞ்ச் வசனங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த சில ஆண்டுகளாக ரஜினிகாந்த் நடித்த படங்கள் ஆக்ஷன் மற்றும் மசாலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் கலந்த குடும்ப படம் என்றும் இந்தத் திரைப்படம் ரசிகர்களை மட்டுமின்றி தாய்மார்களையும் மிகவும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்திசுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.
 

More News

அஜித் இல்லாமலேயே ஆரம்பிக்கப்பட்ட 'வலிமை' படப்பிடிப்பு: பரபரப்பு தகவல் 

தல அஜித் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் பிரம்மாண்டமான திரைப்படம் 'வலிமை'

கொரோனாவுக்கு பலியான பிரபல காமெடி நடிகர்: திரையுலகம் அதிர்ச்சி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸ் திரையுலகினர் எதையும் விட்டுவைக்கவில்லை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லட்சுமிமேனன் உண்டா? அவரே அளித்த விளக்கம்

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள்

சாதாரண பாஸ்போட்டை மட்டும் வைத்து 16 நாடுகளுக்குச் செல்ல முடியும் தெரியுமா??? அதிகாரப்பூர்வத் தகவல்!!!

இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட பாஸ்போட்டை வைத்துக்கொண்டு விசாவே இல்லாமல் 16 நாடுகளுக்கு செல்ல முடியும் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகி இருக்கிறது.

சுடுகாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 2,000 ஆண்டு பழமையான நச்சில்லாத மது… தெறிக்கவிடும் தகவல்!!!

சீனக் கல்லறை ஒன்றில் இருந்து 2 ஆயிரம் பழமையான மது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு சீனாவின் ஹெனான் மாகாணத்தில்