close
Choose your channels

ரஜினிக்கு அவரே எழுதிய பஞ்ச் வசனங்கள்: 'அண்ணாத்த' அப்டேட் 

Thursday, September 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிக விரைவில் தொடங்க உள்ளது. முதல் கட்டமாக ரஜினி இல்லாத காட்சிகளின் படப்பிடிப்புகள் நடைபெறும் என்றும் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் ரஜினிகாந்த் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு பொருத்தமாக ஒரு சில பஞ்ச் வசனங்களை ரஜினிகாந்தை எழுதி உள்ளதாகவும் அந்த வசனங்களை அவர் தொலைபேசி மூலம் இயக்குனர் சிறுத்தை சிவாவுக்கு பேசி காட்டியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வசனங்களை கேட்ட சிறுத்தை சிவா, பஞ்ச் வசனங்கள் மிக அருமையாக இருப்பதாகவும், ரசிகர்கள் இந்த வசனங்களை கண்டிப்பாக ரசிப்பார்கள் என்று அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ’பாபா’ உள்பட ஒரு சில திரைப்படங்களுக்கு ரஜினிகாந்த் பஞ்ச் வசனங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த சில ஆண்டுகளாக ரஜினிகாந்த் நடித்த படங்கள் ஆக்ஷன் மற்றும் மசாலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் கலந்த குடும்ப படம் என்றும் இந்தத் திரைப்படம் ரசிகர்களை மட்டுமின்றி தாய்மார்களையும் மிகவும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்திசுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.