close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே தகுதி இல்லாதவர் ராஜூ: நிரூப் கூறிய அதிர்ச்சி காரணம்!

Sunday, January 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கே தகுதி இல்லை என ராஜூவை நிரூப் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் யார் தகுதி இல்லாதவர் என்று கேள்வியை கமல்ஹாசன் கேட்டபோது அதற்கு பதில் அளித்த நிரூப், ‘பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதி இல்லை என்று சொல்லும் ஒரு ஆள் ராஜூ தான். ஏனெனில் இந்த வீட்டில் வந்து எல்லோரையும் சிரிக்க வைக்கிறார், காமெடி செய்கிறார், எல்லாம் ஓகே தான். ஆனால் இந்த போட்டிக்கான வெறியை நான் இதுவரை அவரிடம் பார்த்ததே இல்லை.

மேலும் இவருக்கு பதிலாக இந்த வீட்டில் யாருக்கு தகுதியுள்ளது என்று கேட்டால் நான் அபிஷேக்கை சொல்வேன். அவரை ஒரு கடுமையான போட்டியாளராக நான் பார்த்தேன். அவரோட தந்திரம் மற்றும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் அவர் தகுதி உள்ளவராக எனக்கு தெரிந்தது என்று கூறினார்.

அப்போது அபிஷேக்கும் ஜோக் எல்லாம் அடிப்பாரே’ என்று கமல்ஹாசன் கூறுவதுடன் இன்றைய இரண்டாவது புரமோ முடிவுக்கு வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.