close
Choose your channels

கண்டதை எல்லாம் வைரல் ஆக்குறிங்க.. இதையும் வைரல் ஆக்குங்கள்: பிக்பாஸ் ரக்சிதா வேண்டுகோள்..!

Thursday, January 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கண்டதை எல்லாம் வைரல் ஆக்கிக் கொண்டிருக்கும் நீங்கள் இதையும் வைரல் ஆக்குங்கள் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா மகாலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை உலகின் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ரக்சிதா மகாலட்சுமி. ’பிரிவோம் சந்திப்போம்’, ’இளவரசி’, ’சரவணன் மீனாட்சி’, உள்பட பல சீரியல்களில் நடித்தவர் ரக்சிதா மகாலட்சுமி. தற்போது இவர் ஜீ தமிழில் ’கோலங்கள் 2’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ‘உப்பு கருவாடு’ ’மெய் நிகரே’ ’ஃபயர்’ போன்ற தமிழ் படங்களிலும் சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரக்சிதா சிறப்பாக விளையாடினார் என்பதும் 91 நாட்கள் தாக்க பிடித்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை ரக்சிதா மகாலட்சுமி ஒரு திரைப்படத்தில் நடித்து கொண்டிருப்பதாக கூறி அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கையில் துப்பாக்கியுடன், காவல்துறை கெட்டப்பில் ஆவேசமாக இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

மேலும் எனது அடுத்த தமிழ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை வெளியாக இருப்பதாக அறிவித்துள்ள ரக்சிதா, இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் ’கண்டதை எல்லாம் வைரல் ஆக்குறதை விட, இதை ஆக்குங்க’ என்றும் அவர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.