பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் திடீர் மாற்றமா? பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த ஐந்தாம் தேதி தொடங்கி முதல் நாள் முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக அறந்தாங்கி நிஷா, அனிதா மற்றும் சுரேஷ் ஆகியோர் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு சிலர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதும் ஒருசிலர் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக புதிதாக உள்ளே வந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் நாகார்ஜுனா படப்பிடிப்பு ஒன்றுக்காக தாய்லாந்து செல்லவிருப்பதாகவும், இதனை அடுத்து அவர் திரும்பி வரும் வரை இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இதே போல் பிக்பாஸ் மூன்றாவது சீசனிலும் நாகார்ஜுனா வெளிநாடு சென்றபோது ரம்யா கிருஷ்ணன் தான் அந்த நிகழ்ச்சியை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பி வந்தவுடன் மீண்டும் நாகார்ஜுனா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.

More News

கோவாவில் வனிதா-பீட்டர்பால்; வைரலாகும் ரொமான்ஸ் புகைப்படங்கள்!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதாவால் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டது என்பதும்

ஈழத்தமிழ் பாடகிக்கு வாய்ப்பு கொடுத்த டி.இமான்: குவியும் பாராட்டு!

பிரபல இசையமைப்பாளர் டி இமான் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் முக்கிய நபராக இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே.

தெலுங்கிற்கு செல்லும் விஜய்சேதுபதியின் முதல் படம்: பரபரப்பு தகவல் 

தமிழ் நடிகராக மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் நடித்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்பது தெரிந்ததே. அந்த வகையில் மலையாள திரையுலகில்

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர்!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் தற்போது சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் 'ஐங்கரன்', 'ஆயிரம் ஜென்மங்கள்', 'அடங்காதே'

தொடர்ந்து 13 ஆண்டாக இந்தியாவின் முதல் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்தவர்!!! வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!!!

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டு உள்ளது. அந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13 ஆண்டுகளாக இந்தியாவின் முதல் பணக்காரராக தேர்வு செய்யப்பட்டு வருகிறார்