close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் திடீர் மாற்றமா? பரபரப்பு தகவல்!

Thursday, October 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த ஐந்தாம் தேதி தொடங்கி முதல் நாள் முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக அறந்தாங்கி நிஷா, அனிதா மற்றும் சுரேஷ் ஆகியோர் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு சிலர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதும் ஒருசிலர் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக புதிதாக உள்ளே வந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் நாகார்ஜுனா படப்பிடிப்பு ஒன்றுக்காக தாய்லாந்து செல்லவிருப்பதாகவும், இதனை அடுத்து அவர் திரும்பி வரும் வரை இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இதே போல் பிக்பாஸ் மூன்றாவது சீசனிலும் நாகார்ஜுனா வெளிநாடு சென்றபோது ரம்யா கிருஷ்ணன் தான் அந்த நிகழ்ச்சியை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பி வந்தவுடன் மீண்டும் நாகார்ஜுனா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.