நடிகை ரம்யா குறித்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி.. நெருக்கமானவர் தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பு காரணமாக மரணமடைந்து விட்டார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ரம்யாவுக்கு நெருக்கமானவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரம்யா நலமுடன் இருப்பதாகவும் தயவுசெய்து அவரை பற்றி எந்த வதந்தியை பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் தனது சமூக வலைதள பக்கத்தில் சற்று முன் தான் நடிகை ரம்யா உடன் பேசியதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் அவர் காலமானார் என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சில நிமிடங்கள் பரபரப்பாக இருந்த நிலையில் தற்போது ரம்யாவின் மரண செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments