400 ஆதிவாசி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கி உதவிய பாகுபலி வில்லன் நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,June 10 2021]

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராணா டகுபதி “பாகுபலி” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுக்கவே பிரபலமானார். அவர் தற்போது கொரோனாவால் அவதிப்பட்டு வரும் 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான அத்யாவசியப் பொருட்களை வழங்கியதோடு அவர்களுக்கு மருத்துவ பொருட்களையும் நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.

தெலுங்கு சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “லீடர்” படத்தில் அறிமுகமான நடிகர் ராணா டகுபதி “பாகுபலி“, “பெங்களூர் டேய்ஸ்“ “ருத்ரம்மாதேவி” போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் தல அஜித்துடன் “ஆரம்பம்” திரைப்படத்திலும் நடித்து இருந்தார். சமீபத்தில் வெளியான “காடன்” திரைப்படத்திலும் இவரது நடிப்பு தனிக்கவனம் பெற்றது.

இந்நிலையில் தெலுங்கானாவில் உள்ள நிர்மல் மாவட்டத்தைச் சேர்ந்த 400 ஆதிவாசி குடும்பங்களுக்குத் தேவையான அத்யாவசியப் பொருட்களையும் மருந்து பொருட்களையும் நடிகர் ராணா டகுபதி நன்கொடையாக வழங்கி உள்ளார். கொரோனா நேரத்தில் நடிகர் ராணா செய்த இந்தக் காரியம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இவர் தற்போது, நடிகர் பிருத்விராஜ் மற்றும் பிஜுமோகன் நடித்து மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். அதோடு “விராத பர்வம்” எனும் திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார். கொரோனா நேரத்தில் நடிகர் ராணா ஆதிவாசி குடும்பத்திற்கு நன்கொடை அளித்து இருப்பது பல தரப்புகளிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

More News

அசத்தலாக பைக் ஓட்டும் ஆல்யா மானஸா: வைரல் வீடியோ

'ராஜா ராணி' என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆல்யா மானசா என்பதும் பின்னர் அந்த தொடரின் நாயகன் சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஆல்யாவுக்கு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு எப்போது?

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு விதிமுறைகளை நீட்டிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உயர் அதிகாரிகள் பலரும் பரிந்துரை செய்து வருகின்றனர்.

அட்லியின் அடுத்த படத்தில் வில்லனாகும் தமிழ் ஹீரோ?

அட்லியின் அடுத்த படத்தில் தமிழ் ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் கவுதம் மேனனுக்கு நன்றி கூறிய யோகிபாபு: காரணம் இதுதான்!

பிரபல இயக்குனர் கவுதம் மேனனுக்கு நடிகர் யோகிபாபு தனது டுவிட்டரில் நன்றி கூறியுள்ளார். இதற்கு காரணம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்

ரெய்டுக்குப் போன போலீஸ்… வீடு புகுந்து கொள்ளை? பொதுமக்கள் அதிர்ச்சி!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமத்தில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலை அடுத்து சில காவலர்கள் அங்கு ரெய்டுக்கு சென்றுள்ளனர்.