இந்த தமிழக வீரருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. ரஷித்கான் புகழாரம்..!

  • IndiaGlitz, [Monday,May 29 2023]

குஜராத் அணியில் உள்ள தமிழக வீரருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது என ரஷித்கான் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ள நிலையில் நேற்று நடைபெற இருந்த இறுதிப்போட்டி மழை காரணமாக இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன.

இந்த நிலையில் பிளே ஆப் 2 போட்டி முடிவடைந்ததும் ரஷீத் கான் பேட்டி அளித்தபோது தனது அணியில் உள்ள சாய் சுதர்சன் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். குஜராத் அணியில் இடம் பெற்றுள்ள சாய் சுதர்சன் மிகச்சிறந்த வீரர் என்றும் அவரை நான் வலைப் பயிற்சியில் கவனித்து இருக்கிறேன் என்றும் என்னை பொருத்தவரை அவர் ஒரு வித்தியாசமான வீரர் என்றும் அவரது உழைப்பை பார்க்கும்போது எதிர்காலத்தில் அவர் நிச்சயம் இந்திய அணியில் இடம் பெறுவார் என்றும் கூறியுள்ளார்.

அதேபோல் அபிநவ் மனோகர் சிறந்த வீரர் என்றும் அவரிடம் அபாரமான திறமை இருப்பதை நான் கவனித்தேன் என்றும் இன்னும் மூன்று ஆண்டுகள் விளையாடினால் அவர் மிகச்சிறந்த வீரராக வாய்ப்புண்டு என்றும் ரஷித்கான் தெரிவித்துள்ளார்.

சாய் சுந்தர் மற்றும் அபினவ் மனோகர் ஆகிய இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'கமல் 234' திரைப்படம் 'நாயகன்' இரண்டாம் பாகமா? விருது வழங்கும் விழாவில் செம அப்டேட்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் 'கமல் 234'  திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் மணிரத்னம் இயக்க இருக்கும் இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும்

'துருவ நட்சத்திரம்' படத்திற்கு மீண்டும் திரும்பிய சியான் விக்ரம்.. சூப்பர் அப்டேட்..!

சியான் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'தங்கலான்' என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் மீண்டும் 'துருவ நட்சத்திரம்' படத்திற்கு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளன. 

'பொன்னியின் செல்வன்' வெற்றியால் த்ரிஷாவுக்கு குவியும் வாய்ப்பு.. எல்லாமே மாஸ் படங்கள் தான்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் சூப்பராக நடித்த நடிகை த்ரிஷாவுக்கு தற்போது திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

மனதை கொள்ளையடிக்கும் கீர்த்தி சுரேஷின் அழகு.. பெஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை கீர்த்தி சுரேஷின் மனதை கொள்ளை அடிக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லைக், கமெண்ட் குவிந்து வருகிறது.

37 வருடங்களுக்கு முன் விஷ்ணு விஷால் மனைவி எப்படி இருந்தார் தெரியுமா? வைரல் புகைப்படம்..!

நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டா 37 வருடங்களுக்கு முன் தனது பெற்றோருடன் இருந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.