நாடக ஒத்திகையில் விபரீதம்… 10 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்!

  • IndiaGlitz, [Monday,August 02 2021]

பகத்சிங் தூக்கிலடப்படுவதைப் போன்று ஒத்திகை பார்த்த 10 வயது சிறுவன் உத்திரப்பிரதேச மாநிலத்தில் தானே தூக்கிலிட்டுக் கொண்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் புதான் எனும் மாவட்டத்தில் உள்ள குன்வர்கான் கிராமத்தில் சிறுவர்கள் சிலர் நாடக ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளனர். வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரத்தின விழாவிற்காக பகத்சிங் பற்றிய நாடகம் அரங்கேற இருந்தது. இந்த நாடகத்தில் பகத்சிங் வேடத்தில் சிவம் எனும் 10 வயது சிறுவன் நடிக்க இருந்தார்.

இந்நிலையில் சிறுவர்களோடு சேர்ந்து நாடக ஒத்திகையில் ஈடுபட்டபோது சிவம் தனது கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு நாற்காலி மேல் நின்றிருக்கிறார். எதிர்பாராத விதமாக அந்த நாற்காலி இடறி விழுந்திருக்கிறது. இதனால் சிவன் கயிற்றில் தொங்க ஆரம்பித்ததோடு அவரது கழுத்தும் இறுகி இருக்கிறது. இதனால் பதறிப்போன மற்ற சிறுவர்கள் பெற்றோர்களை அழைப்பதற்குள் சிறுவன் சிவம் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

சீமானை தேடி எல்லோரும் வருவாங்க… ஆருடம் சொல்லும் டிங் டாங் சோதிடர்!

தமிழக அரசியலில் 3 ஆவது பெரும் தலைவராக உருவெடுத்து இருக்கும் திரு.சீமான் குறித்து நாடி ஜோதிடர் பாபு அவர்கள் ஒரு வியக்க வைக்கும் தகவலை கூறியிருக்கிறார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்ற வீராங்கனை? மலைக்க வைக்கும் ஆச்சர்யம்!

2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டிகள் சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் தற்போது ஜப்பானில் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து 2 ஒலிம்பிக் பதக்கம்… சாதனை படிகளில் பி.வி.சிந்து!

8 வயதில் பேட்மிண்டன் விளையாட துவங்கிய பி.வி.சிந்து வெறும் 26 வயதிலேயே, ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து இருமுறை பதக்கம் வென்றுள்ளார்.

முக்கிய காட்சியை கட் செய்துவிட்டார்கள்: 'அடுத்த சாட்டை' படம் குறித்து நடிகை கன்னிகா ரவி

திருமணத்திற்கு முன்னர் நடிகை கன்னிகா ரவி நமக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் நடித்த படம் ஒன்றின் காட்சிகளை நடித்துக் காண்பித்துள்ளார்.

திருமணம் முடிந்த மறுநாளே சினேகனுக்கு நிகழ்ந்த நிகழ்வு: திருப்பம் என்பது இதுதானோ?

திருமணம் முடிந்த மறுநாளே தனக்கு நிகழ்ந்த நிகழ்வு குறித்து குறிப்பிட்டுள்ள கவிஞர் சினேகன் 'திருமணம் நடந்தால் திருப்பம் ஏற்படும் என்பது இதுதானோ' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்