சேலஞ்ச்சுக்கு நீங்க ரெடியா? விலங்குகளின் தாகம் தீர்க்க அழைப்பு விடுத்து இருக்கும் பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Friday,April 02 2021]

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறந்து கொண்டு இருக்கும் இளம் நடிகை ரெஜினா கெசண்ட்ரா. இவர் தமிழில் “கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “ராஜதந்திரம்”, “மாநகரம்“, “சரவணன் இருக்க பயமேன்”, “சக்ரா” போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.

தற்போது “பார்ட்டி“, “கள்ளபார்ட்“, “கசடதபற“, “சூர்ப்பனகை“ போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிப்புடன் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் சமீபத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் கலந்து கொண்டு பரிசையும் தட்டிச்சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ரெஜினா தன்னுடைய டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “வாட்டர் பவுல் சேலஞ்ச் 2021“ ற்கு அழைப்பு விடுத்து இருக்கிறார். அதாவது கோடைகாலத்தில் தண்ணீர் தாகத்தினால் தவிக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உதவி செய்யும் விதமாக ஆங்காங்கே சின்ன சின்ன பாத்திரங்களில் தண்ணீர் வைக்கும் பழக்கதை பல அமைப்புகள் ஊக்குவித்து வருகின்றனர். இதுபோன்ற ஒரு வழகத்தை People for cattle in India எனும் அமைப்பு கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா முழுவதும் பல இடங்களில் செயல்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டிற்கான இந்த சேலஞ்சில் நடிகை ரெஜினாவும் இணைந்து கொண்டுள்ளார். அந்த வகையில் விலங்குகள் மற்றும் பறவைகளின் தாகத்தை போக்குவதற்காக தெருக்கள், மொட்டைமாடி, வீடு முற்றம், கோயில் போன்ற இடங்களில் தண்ணீர் வைப்பதற்காக பொதுமக்களை நடிகை ரெஜினா ஊக்குவித்து வருகிறார். அதோடு PFCI சார்பாக இலவசமாக கிண்ணத்தை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்தக் கிண்ணத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்ளும் நபர்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் தாகம் எடுத்து வருந்தும் விலங்கு மற்றும் பறவைகளுக்கு தண்ணீரை வைத்தால் மட்டும் போதுமானது.

இப்படியொரு உத்வேகமான சேலஞ்ச்சில் தற்போது நடிகை ரெஜினா பங்கேற்று இருப்பது குறித்து பலரும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த சேலஞ்ச்சிற்கு அழைப்பு விடுத்து இருக்கும் நடிகை ரெஜினா பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் தன்னுடைய டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More News

தேர்தலுக்கு பின் சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாகும்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

தேர்தலுக்குப் பின் சென்னையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு கடுமையாகும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சர்ச்சையை கிளப்பிய உதயநிதி பேச்சு ...! முற்றுப்புள்ளி வைத்த சுஷ்மா மகள்...!

அண்மையில் பிரச்சாரத்தின் போது திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடியால் தான் சுஷ்மா ஸ்வராஜ் இறந்தார் என்று கூறியது மிகவும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. 

அஸ்வின் - ஷிவாங்கிக்கு கிடைத்த விருது: ரசிகர்களுக்கு சமர்ப்பணம் செய்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சி மிக விரைவில் முடிய போகிறது என்ற சோகம் மட்டும்தான்

கோவை மாவட்டமே எங்களுக்காக குவிந்துள்ளது...! பிரச்சாரத்தில் தட்டித்தூக்கும் எடப்பாடியார்...!

திமுக அமைச்சர்களின் மீதுள்ள வழக்குகள், நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில்,

விஜய்சேதுபதி படப்பிடிப்பில் 'எஞ்சாய் எஞ்சாமி' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட நடிகை!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 46-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்க இருப்பதாகவும், டி இமான் இசையமைக்கவுள்ளதாகவும்