டாடாவை அடுத்து முகேஷ் அம்பானியின் நிதியுதவி குறித்த அறிவிப்பு

உலகம் முழுவதும் மனித குலத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக இந்தியாவையும் ஆட்டுவித்து வருவது தெரிந்ததே.

கொரோனா வைரஸிடமிருந்து இந்திய மக்களை காப்பாற்ற மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மத்திய அரசுக்கு உதவிடும் வகையில் தொழிலதிபர்களும் திரையுலக பிரமுகர்களும் விளையாட்டு வீரர்களும் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை டாடா நிறுவனம் 1500 கோடி, அதானி குழுமம் 100 கோடி, கோடக் மகேந்திரா வங்கி 50 கோடி, பிசிசிஐ 51 கோடி, அக்ஷய்குமார் 25 கோடி, சச்சின் தெண்டுல்கர் ரூ.25 லட்சம் என கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் மத்திய அரசுக்கு இந்தியுதவி குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரூபாய் 500 கோடி கொரோனா தடுப்பி நிதியாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 100 பெட்கள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனை ஒன்றை முகேஷ் அம்பானியின் நிறுவனம் மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஊரடங்கால் பாதித்த மக்களுக்கு ரூ.1.25 கோடி செலவு செய்த சானியா மிர்சா

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக கோடிக்கணக்கான ரூபாய்களை தொழிலதிபர்களும்,

டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு: லட்சக்கணக்கான மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை

திருச்சி அருகேயுள்ள உறையூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

டெல்லி கூட்டத்தில் பங்கேற்ற 1500 தமிழர்களில் 16 பேர்களுக்கு கொரோனா: மீதமுள்ளவர்களுக்கு?

டெல்லியில் சமீபத்தில் தனியார் அமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்! பிரபல இயக்குனரின் நீண்ட பதிவு

கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் இந்தியாவுக்குள் எப்படி நுழைந்தது, அரசு எங்கெங்கே கோட்டை விட்டது, ஊடகம் இதற்கு முக்கியத்துவம் தராமல்

வீடு தேடி வரும் அத்தியாவசிய பொருட்கள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது