கமல்ஹாசனுடன் 27 வருடங்கள் கழித்து நடிக்கும் நடிகை!

  • IndiaGlitz, [Friday,November 01 2019]

கமல்ஹாசன் நடிப்பில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான ’தலைவன் இருக்கின்றான்’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன

கடந்த 1992 ஆம் ஆண்டு கமலஹாசன், ரேவதி, கவுதமி, நாசர் நடிப்பில் உருவான ’தேவர் மகன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் படம் ’தலைவன் இருக்கின்றான்’ படத்தில் தேவர் மகன் படத்தில் நடித்த ஒரு சில நடிகர் நடிகைகள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக தேவர் மகன் படத்தில் நடித்த வடிவேலு இந்த படத்திலும் ஒரு கை இல்லாதவராக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தேவர் மகன் படத்தில் கமல்ஹாசன் மனைவியாக நடித்த ரேவதி இந்த படத்திலும் அதே கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 27 வருடங்கள் கழித்து மீண்டும் கமலுடன் ரேவதி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தேவர் மகன் படத்தில் இன்னொரு நாயகியாக நடித்த ‘கவுதமி’ இந்த படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது இதற்குரிய பதிலை படக்குழுவினர் விரைவில் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

ஜெயம் ரவியின் 'பூமி' படத்தின் முக்கிய அப்டேட்!

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து அதே உற்சாகத்தில் ஜெயம் ரவி தற்போது 'பூமி'

ரஜினி, தனுஷ் படங்கள் ஒரே நாளில் ரிலீஸா?

கோலிவுட் திரையுலகில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி இரண்டு படங்களும் வெற்றி பெறும் வழக்கம் அதிகமாகி வருகிறது. கடந்த பொங்கல் தினத்தில்

பரவை முனியம்மா குறித்து பரவி வதந்தியால் பரபரப்பு

விக்ரம் நடித்த 'தூள்' படத்தில் இடம்பெற்ற 'சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...' என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா.

மீண்டும் இணைந்த தமிழ் திரையுலகின் இரு மேதைகள்!

தமிழ் சினிமாவில் பாரதிராஜாவும் இளையராஜாவும் புதிய புரட்சியை உருவாக்கினார்கள் என்றால் அது மிகையில்லை. ஸ்டுடியோக்களில் மட்டுமே திரைப்படங்கள்

ஒரே வாரத்தில் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபம் கொடுத்த 'கைதி'

கடந்த தீபாவளி தினத்தில் விஜய்யின் பிகில் என்ற பிரம்மாண்டமான படத்துடன் தைரியமாக வெளிவந்த ஒரே படம் கார்த்தியின் கைதி மட்டுமே. இந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் குறைவான திரையரங்குகளே