பாகிஸ்தான் கொடியுடன் பாடகி ரிஹானா? வைரல் புகைப்படத்தின் உண்மை நிலவரம் என்ன?

  • IndiaGlitz, [Saturday,February 06 2021]

அமெரிக்க பாப் பாடகியும் பிரபல நடிகையுமான ரிஹானா இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு பல வகைகளில் எதிர்ப்புகளும் கிளம்ப தொடங்கின. இந்நிலையில் ரிஹானா பாகிஸ்தான் கொடியுடன் காட்சி அளிப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரப் பிரதேசத்தின் மாநில இளைஞர் அணி தலைவர் அபிஷேக் மிஸ்ரா முதன் முதலாக இந்தப் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாடகி ரிஹானா எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பது போன்ற தேடல்களும் கூகுளில் அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன. மேலும் பாடகி ரிஹானா பாகிஸ்தான் ஆதரவுடன்தான் இந்தக் கருத்தை வெளியிட்டு இருக்கிறார் என்றும் சில நெட்டிசன்கள் அவருக்கு கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் உண்மையில் இது மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 2019 இல் உலகக்கோப்பை தொடரின் போது ரிஹானா மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு ஆதரவாக அந்நாட்டு கொடியை ஏந்தி இருந்தார். மேலும் அந்தப் புகைப்படத்தை ரிஹானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். அந்தப் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து யாரோ பாகிஸ்தான் கொடியை இணைத்து வெளியிட்டு இருக்கிறார்கள் என்று தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.

More News

மகள் பிறந்த நாளில் ஆரி கொடுத்த ஆக்கபூர்வமான பரிசு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னரான ஆரி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதும் சரி, நிகழ்ச்சிக்கு பின்னரும் சரி ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

சென்னையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடும் இங்கிலாந்து வீரர்கள்… என்ன காரணம்?

இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

வலியில் துடித்த இங்கிலாந்து வீரர்: முதல் நபராக உதவிக்கு ஓடி வந்த விராத்: வைரல் வீடியோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் தொடங்கியது என்பது தெரிந்ததே.

அடித்தது ஜாக்பாட்: ஆர்யா சகோதரிக்கு எத்தனை கோடி பரிசு தெரியுமா?

நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு ஜாக்பாட் பரிசாக 32 கோடி லாட்டரி சீட்டு பரிசு கிடைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 

ஃபிரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு: மீண்டும் பாலாவுடன் இணைந்த ஷிவானி?

பிக்பாஸ் வீட்டில் பாலாஜியுடன் நெருக்கமாக இருந்த ஷிவானி நாராயணன் அவரது கைக்குள் இருந்ததால்தான் தனது தனித்தன்மையை இழந்ததாகவும் விமர்சனம் செய்யப்பட்டார்