close
Choose your channels

10 வருடம் நிச்சயமாக ஒரு மைல்கல்தான்… திருமண நாளில் விஜய் பட நடிகை நெகிழ்ச்சி!

Friday, February 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் நட்சத்திர ஜோடிகளுள் ஒன்றான ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் நடிகை ஜெனிலியா இருவரும் நேற்று தங்களது 10 ஆவது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வின்போது நடிகை ஜெனிலியா 10 வருடம் என்பது நிச்சயமாக ஒரு மைல்கல்தான் என்று தனது திருமண வாழ்க்கை குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகையான ஜெனிலியா தளபதி விஜய்யுடன் இணைந்து “சச்சின்“ திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து “சந்தோஷ் சுப்பிரமணியம்“, “வேலாயுதன்“ போன்ற பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே தனி வரவேற்பு பெற்றிருந்தார். தமிழைப் போலவே தெலுங்கிலும் அவர் முன்னணி நடிகையாக வலம்வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 3,2012இல் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் தம்பதிகளாக வலம்வந்தாலும் நண்பர்களைப் போலவே தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடுவது, தங்களது குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது என இருந்துவந்தனர். மேலும் இந்தத் தம்பதிகளுக்கு ரியான், ரஹில் என இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது நடிகை ஜெனிலியாவும் தொடர்ந்து சினிமாவில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் தங்களது 10 ஆவது திருமண நாளை கொண்டாடிய நடிகை ஜெனிலியா இருவரும் 10 வருடங்கள் நிச்சயமாக ஒரு மைல்கல்தான் பிசியான வாழ்க்கைக்கு இடையே நாம் காதலில் பங்குதாரர்களாக இருந்தோம். பெற்றோர்கள், வணிக பங்குதாரர்கள் என ஒருவருக்கொருவர் உதவிசெய்து கனவுகளை உருவாக்கி அதை ஒன்றாக நிறைவேற்ற முயற்சி செய்கிறோம்.

நான் உன்னை தினமும் கொண்டாடுவேன். முடிவில்லாத அணைப்புகள் இன்னும் இருக்கும் என நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு ரசிகர்களிடையே பாராட்டை குவித்துவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.