ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,November 24 2017]

நேற்று ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக பெயர், கொடி சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் இன்று ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து அவரது தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கு வரும் 27ஆம் தேதி முதல் மனுதாக்கல் செய்யலாம் என்றும் மனுதாக்கல் செய்ய கடைசி தினம் டிசம்பர் 4ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிசம்பர்ம் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் டிசம்பர் 7ஆம் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 24ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று இரவுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

More News

'வேலைக்காரன்' இசை வெளியீட்டு தேதி குறித்த தகவல்

பிரபல இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த வேலைக்காரன் திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இன்று காலை நமீதா-வீரா திருமணம்: திருப்பதியில் நடந்தது

நடிகை நமீதா இன்று காலை தனது காதலர் வீரேந்திர செளத்ரியை திருமணம் செய்து கொண்டார். திருப்பதியில் உறவினர், நண்பர்கள், திரையுலகினர் சூழ இந்த திருமணம் நடைபெற்றது.

ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான 'டிக் டிக் டிக்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது

விஜய் ஆண்டனியின் 'அண்ணாதுரை' ரன்னிங் டைம்

விஜய் ஆண்டனி நடித்த 'அண்ணாதுரை' திரைப்படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ், சென்சார் என அனைத்து பணிகளும் முடிவடைந்து வரும் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இயக்குனர் சசிகுமாரையாவது காப்பாற்றுங்கள்: காவல்துறைக்கு வைகோ வேண்டுகோள்

இயக்குனர் சசிகுமாரின் உறவினர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இயக்குனர் சசிகுமாரையாவது கந்துவட்டிக்காரர்களிடம் இருந்து காவல்துறை பாதுகாக்க வேண்டும் என்று வைகோ பேசியுள்ளார்.