close
Choose your channels

ஆர்.கே.நகர் தேர்தல்: தீபா வேட்புமனு நிராகரிப்பு

Tuesday, December 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளுக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர்கள் பரபரப்புடன் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் டிடிவி தினகரன், விஷால் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 

இந்த நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் முடிவடைந்து இன்று மனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில் சுயேட்சை வேட்பாளர் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். 

தீபா தன்னுடைய வேட்புமனுவில் படிவம் 26ஐ நிரப்பாததால் அவர் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.