close
Choose your channels

துருவ் விக்ரம் - ரோஜா மகள் இணைந்து நடிப்பது உண்மைதானா? ஆர்கே செல்வமணி விளக்கம்!

Monday, October 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நேரடி தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவின் மகள் அன்ஷூகா மாலிகா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த செய்தி குறித்து இயக்குனர் ஆர் கே செல்வமணி விளக்கமளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ’ஆதித்ய வர்மா’ என்ற திரைப்படத்தின் நடிகராக அறிமுகமான விக்ரம் மகன் துருவ் விக்ரம், அதன்பின் ‘மகான்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த நிலையில் நேரடி தெலுங்கு திரைப்படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த திரைப்படத்தில் நட்சத்திர தம்பதிகளான ஆர்கே செல்வமணி - ரோஜா தம்பதிகளின் மகள் அன்ஷூகா மாலிகா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த செய்தி குறித்து ஆர்கே செல்வமணி கூறியபோது, ‘எங்கள் மகள் அன்ஷூகா மாலிகா மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் இந்தியா திரும்ப இன்னும் நான்கு ஆண்டுகள் ஆகும். அதனால் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக தெலுங்கு படத்தில் அவர் நடிப்பதாக வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி என்று கூறினார். ஒருவேளை எனது மகள் இந்தியா திரும்பியவுடன் சினிமாவில் நடிக்க விரும்பினால் அதன் பிறகு யாருடன் ஜோடியாக நடிப்பது என்பது குறித்து அப்போது முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ரோஜா மகள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.