விஜய்யின் குஷி பட பாணியில் இணையும் காதல் ஜோடிகள்! ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம்!

  • IndiaGlitz, [Thursday,April 25 2019]

திரைப்படங்களில் யுகங்களின் அடிப்படையில் எழுதப்படும், கதைகள் கூட சில நேரங்களில் நிஜ வாழ்க்கையிலும் நடக்கிறது.

அந்த வகையில், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், விஜய் மற்றும் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி படத்தின் பாணியில், ஒரே மருத்துவமனையில், ஒரே நேரத்தில் பிறந்த இரண்டு குழந்தைகள் தற்போது கணவன், மனைவியாக மாற உள்ளனர்.

1992 ஆம் ஆண்டு, டிசம்பர் 22ஆம் தேதி கிரேட் மான்செஸ்ட்டர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளனர். ஆண் குழந்தைக்கு டாம் என்றும், பெண் குழந்தைக்கு சவுனா கிரேசி என்றும் பெயரிட்டுள்ளனர் இவர்களுடைய பெற்றோர்.

பின் இருவரும் வெவ்வேறு பள்ளி, வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தாலும், தங்களுடைய பதினெட்டாவது வயதில் விதியின் வசமாக சந்தித்துள்ளனர். சந்தித்த நொடிப்பொழுதே இவர்களின் பிறந்த ரகசியம் குறித்து தெரியவந்துள்ளது.

இதனால், இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். முதல்முறையாக டாம் தன்னுடைய காதலை சவுனா கிரேசியிடம் தெரிவிக்க, ஆரம்பத்தில் காதலை ஏற்க மறுப்பு தெரிவித்த சவுனா பின் ஒப்புக்கொண்டார்.

தற்போது இவர்கள் இருவரும் தங்களுடைய 27 ஆவது வயதில், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதனை மிகவும் பெருமையுடன் கூறியுள்ள இவர்கள், தங்களுடைய திருமணம் பிறந்தபோதே மருத்துவமனையில் முடிவாகிவிட்டதாக தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு பலரும் திருமண வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

More News

சூர்யாவின் என்.ஜி.கே டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி முடித்துள்ள 'என்.ஜி.கே. திரைப்படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாகவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

ஸ்ரீதேவியின் 2வது மகளை அறிமுகம் செய்யும் பிரபல தயாரிப்பாளர்!

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், கடந்த ஆண்டு வெளியான 'தடக்' என்ற பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த நிலையில் தற்போது அவரது இரண்டாவது மகள் குஷிகபூரும்

தம்பியை கொலை செய்த பில்லா ஜெகன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்!

சொத்து தகராறில் சொந்த தம்பியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த பில்லா ஜெகன் என்பவர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தை நோக்கி வரும் புயலின் பெயர்: ரெட் அலர்ட் அறிவிப்பு

இந்தியப்பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி வரும் 29 அல்லது 30ம் தேதி தமிழக கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

அன்புப்பரிசு அளித்த ரோபோசங்கருக்கு நன்றி தெரிவித்த கோமதி!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கி கொடுத்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு நாடெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.