close
Choose your channels

'ஆர்.ஆர்.ஆர்' பிரபலம் வீட்டில் நடந்த துக்க நிகழ்வு.. திரையுலகினர் இரங்கல்..!

Thursday, February 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படமான ’ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தில் பணிபுரிந்த பிரபலத்தின் வீட்டில் நடந்த துக்க நிகழ்வை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவான திரைப்படம் ’ஆர்ஆர்ஆர்’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் வசூலை வாரி வழங்கியது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த செந்தில்குமார் அவர்களின் மனைவி ரூஹி என்பவர் சற்றுமுன் காலமாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய இறுதி சடங்கு நாளை காலை 9 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி ஒளிப்பதிவாளர் செந்தில் குமார், ரூஹியை திருமணம் செய்து கொண்டார். ரூஹி ஒரு யோகா டீச்சர் என்பதும் அவர் ஹைதராபாத்தில் யோகா வகுப்புகள் நடத்தி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவாளர் செந்தில் குமார் மனைவி ரூஹி மறைவை அடுத்து திரை உலக பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment